யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரான்சீஸ்கம்மா அமலதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேசம் என்றும் நிலைத்திருக்க
பாசத்தை எம்முள் விதைத்து
அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
எங்கள் அன்பு அம்மாவே
ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை அம்மா
உங்களின் பிரிவை
உம்மை நாம் இழந்த
துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
எம்மனது என்றென்றும்
உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
தகவல்: கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்