யாழ். கொக்குவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், உடுவில் கிழக்கு, இணுவில் கிழக்கு, மருதனார்மடம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் மனோன்மணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 15-5-2021
தாயின் பெருமை
அம்மா எனும் பொக்கிஷம்
இல்லையெனில் இவ்வுலகில் ஜனனம் இல்லை
ஆகையால் அம்மா எனும் சொல்லுக்கு
தமிழுக்கு கருத்துமுண்டோ
தாயே நீ வலி பெறுத்து எம்மை
இவ்வுலகுக்கு கொண்டு வந்தாய்
ஆதனால் தாய் பிள்ளைக்கு வலி ஏற்பட்டால்
தன் வலியாக கருதுவது அம்மாவின்
தொப்புள் கொடியுறவே
ஆயிறம் உறவுகள்யிருந்தாலும் அம்மாவெனும்
உறவே கடவுளுக்கு நிகரானது
இவ்வுலகினில் எதை எடுத்தாலும் அளவுண்டு
ஆனால் அம்மாவின் பாசத்திற்கு
அளவு என்று யாரும் கண்டதில்லை
ஏனேன்றால் அது தொப்புள் கொடிமூலம்
அளவிடபட்டது என்றால் மிகையாகாது
கடவுள் இல்லை என்றால் அதுபொய் என்பேன்
ஏன்னேன்றால் அவர்வர் அம்மாவின் கருவறையே கடவுள் என்பேன்
கவிதை ஆக்கம் : மேகன் இராசரத்தினம் நவநீதன்(மகன்)
என்றும் உங்கள் நினைவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள், சகோதரங்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.