யாழ். சுன்னாகம் பொன்னரங்கத்தை பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பு சிவஞானசுந்தரம் அவர்கள் 13-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பு பொண்ணுப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ராமநாதன் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,
லோகேஸ்வரி(லண்டன்), விக்னேஸ்வரி(கனடா), சிவதம்பு(சைவ முன்னேற்ற சங்கம் பிரித்தானியா, தலைவர் சுன்னாகம் மக்கள் ஒன்றியம் ஐக்கியராச்சியம்) ஆகியோரின் அன்பு தந்தையும் ,
விநாயகமூர்த்தி , ரவீந்திரன், முத்துராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவசங்கரநாதன் ஆகியோரின் அருமை சகோதரரும்,
கவிலோன், யசிக்கா, தர்ஷனா, யஸ்வினி, தனுஷா கவிலோன் ஆகியோரின் அன்பு பேரனும்,
கத்தியா, கைரா, கைரன் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.