முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகசபை தியாகராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாலும் பண்பாலும்
அனைவரையும் கவர்ந்திட்ட
எங்கள் வீட்டு தெய்வமே
நீர் சென்ற இடம் தான் எதுவோ...?
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ?
காலங்கள் விடை பெறலாம் நம்
கண்முன்னே நிழலாடும் உங்கள் நினைவுகள்
ஒருபோதும் எங்களை விட்டு போகாது
ஆண்டு ஒன்று கழிந்தாலும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
குடும்பத்தினர்