கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா சீத்தாலஷ்மி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு உறைவிடமாக இருந்த
எங்கள் அன்பு அம்மாவே
ஆயிரம் சொந்தங்கள் இருந்தும் -அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா?
அன்பையும் அறிவையும் தந்து
எங்களை வளர்த்த அன்பு அம்மா
இந்த அவனியிலே எமை தனியே
தவிக்க விட்டு அமைதியாய் சென்றதேனோ?
களங்கமற்றதம்மா உங்கள் பாசம்
நெகிழவைத்தது உங்கள் அன்பு
உயிரை உறைய வைத்தது உங்கள் பிரிவு!
இந்த மண்ணில் உங்களை போல் யாரைக்
இனி நாம் காண்போம் அம்மா?
இன்றும், என்றும் எமது மனம்
உங்களை தேடிக்கொண்டேதான் இருக்கும் அம்மா
உங்களை நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதம்மா!!!
ஆண்டு ஒன்றானாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்களோடு வாழும்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
குடும்பத்தினர்