31ஆம் நாள் நினைவு அஞ்சலியும் நன்றி நவில்தலும்
‘நன்றி
நவில்கின்றோம்'
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற
மகற்கு" - திருக்குறள்
அன்பின் திருவுருவாய் பண்பின் சிகரமாய் பாசத்தின் ஒளி விளக்காய்
அறத்தின் வழி நின்று எங்கள் வாழ்வின் வழி காட்டியாய் திகழ்ந்து நெஞ்சில் நீங்காத
நினைவுகளைத் தந்து ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொள்ளும் எங்கள் அன்பு
குடும்பத் தலைவர் அமரர்.இரத்தினம் சந்திரபதி ஐயா அவர்கள் சிவபதம் எய்தியதை அறிந்து
உடனுக்குடன் தங்களால் முடிந்த பல உதவிகளை செய்தவர்களுக்கும், அனுதாபங்களை தெரிவிக்க எமது இல்லங்களுக்கு நேரில் வருகை
தந்தவர்களுக்கும், நாங்கள் துயரத்தில் இருக்கையில் மன
ஆறுதல் கூறியோருக்கும், தமது சிரமத்தையும் பாராது உணவுகளை
தந்து உதவியோருக்கும் முகநூல், மின்னஞ்சல்
மூலம் அனுதாப செய்தி அனுப்பியோருக்கும், எங்கள் ஆழ்ந்த துயர நேரத்தில் எமது வேலைகளில் பங்கு கொண்டு பெறும்
உதவி புரிந்தோருக்கும், இறுதிக் கிரியை, தகன மையம் ஆகியவற்றுக்கு வருகை தந்து மலர் வளையங்கள்
வைத்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரங்கள்
வெளியிட்டவர்களுக்கும் மற்றும் அயலவர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கும் எங்கள்
குடும்பத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
இங்ஙனம் குடும்பத்தினர் .