யாழ்.குப்பிழான் காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், குப்பிழான், முல்லைத்தீவு ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த நாகையா சண்முகலிங்கம்(பொடியர் மாமா) {ஓய்வுநிலை கல்வித் திணைக்கள அலுவலக உதவியாளர்} கடந்த வெள்ளிக்கிழமை(30-07-2021) பிற்பகல்-03.27 மணியளவில் தனது 78 ஆவது வயதில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நாகையா சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற புஷ்பராணி ரதியின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மருமகனும் ஆவார்.
பாக்கியம்(கனடா), சிவசிதம்பரலிங்கம்(ஓய்வுநிலை அதிபர்- குப்பிழான்), புஷ்பராணி(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), பஞ்சலிங்கம்(குப்பிழான்), தனலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், கனகேஸ்வரி(யமுனா)-ஜேர்மன், கனகேஸ்வரன்(சங்கர்)-கனடா, கோணேஸ்வரி(வேவி)- கனடா, ரோகிணி(சைலா)- குப்பிழான் ஆகியோரின் அன்புத் தந்தையும், வதனா, நிர்மலன், சரவணன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஆதுசன், ராகுல், யதீசா, விதுசா, சர்விகா, யக்சிதன் ஆகியோரின் பாசமிகு பேரனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(01.08.2021) முற்பகல்-11 மணியளவில் குப்பிழான் முத்தர்வளவுப் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும்.அதனைத் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் குப்பிழான் காடாகடம்பை இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுத் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Information : Relatives