யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா நடராஜா அவர்கள் 25-08-2021 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஷ்வரிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெபரஞ்சன்(கனடா), ஜெயராஜ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற யோகராஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சியாமிளா, பிருந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரூசன், அபீசன், தரினீஷ், சைந்தவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவசோதி(அதிபர்), அருட்சோதி(இளைப்பாறிய அதிபர்), ஜெயசோதி(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
பத்மாவதி, கௌசலா, மங்களம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செந்தூரன், துசியா, ஸ்ரீரகு, ஸ்ரீரூபா, குஜேலா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை கொழும்பு மகிந்த மலர்சாலையில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.