யாழ்.கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், கைதடி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தெய்வநாயகி அவர்கள் 04-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிதாம்பரம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான விஜயகுமார், விஜயரஞ்சினி மற்றும் உதயகுமார்(சுவிஸ்), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவந்தினி(சுவிஸ்), நிறைஞ்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
சின்னத்தங்கம், அமிர்தமலர் அம்மா, காலஞ்சென்றவர்களான கந்தையா, அன்னலட்சுமி, செல்வரத்தினம் மற்றும் சின்னத்துரை, இராசநாயகம், வேலுப்பிள்ளை, இராசமணி, இந்திரபுவனானந்ததேவிம் பூபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வினோஜன்(சுவிஸ்), சுபிர்ணா(லண்டன்), சுபிட்ஷா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.