யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா வாசன் அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா தனபாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
முரளிகாந்(சுவிஸ்), விஜயகாந்(ஐசன் - சுவிஸ்), ஆதித்தன், ஆர்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லட்சிகா(சுவிஸ்), அச்சுதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி, விநாயகமூர்த்தி, சத்தியமூர்த்தி, ஆனந்தமூர்த்தி, கிருபானந்தமூர்த்தி, சுந்தரமூர்த்தி மற்றும் மணிமேகலை, கிருஸ்ணமூர்த்தி, கண்ணகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை மற்றும் கமலாம்பிகை, மனோரஞ்சிதம், புவனேஸ்வரி, நாகபூபதி, வசந்தமலர், கனகலிங்கம், கமலா, சந்திரா, சோமஸ்கந்தராசா, சறோஜினி, மகேந்திரராஜா, குலேந்திரராஜா(சிவன்), சாந்தி, மதி, தவம், குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சத்தியா(சுவிஸ்), சித்திரா(சுவிஸ்), வெற்றி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.