யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே
எங்கள் குலதெய்வமே.!
ஓராண்டு கரைந்தோடிய போதும்
உம் நினைவு எம்மைவிட்டு அகலவில்லை
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியவில்லை அப்பா!
உங்கள் நினைவலைகள் எங்கள்
கண்முன்னே நிழலாடுகிறதே!
ஓராண்டு என்ன எத்தனை ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் உங்கள் அன்பும் பாசமும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!