திரு. கனகரட்ணம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 16/10/2021 அன்று ஜேர்மனியின் காலமானார்கள்.
அன்னார் உடுவிலில் பிறந்தவரும், களுத்துறை மற்றும் கொழும்பில் வாழ்ந்தவரும், ஏறக்குறைய 40 வருடங்கள் வரை ஜெர்மனியில் வசித்து வந்தவருமாவார் .
அன்னார் காலம்சென்ற உடுவில் திரு. கனகரட்ணம், திருமதி இராசமணி ஆகியோரின் அன்பு மகனும்,
காலம்சென்ற உரும்பிராய் வடக்கு திருப்பதிகுடும்பம் திரு. வெற்றிவேலு, திருமதி. மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
உரும்பிராயைச் சேர்ந்த மதிவதனியின் (வதனி)யின் அன்புக் கணவரும்,
காலம்சென்ற பிரஷாந்த் மற்றும் பிரசாதனா,பிரஜீவனா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
ஜெகதீஸ்வரி, இராஜேஸ்வரன், கனகேஸ்வரன், இரட்ணேஸ்வரன், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மீனாம்பிகை(மீனா), இந்திரன், மனோகரி, ரஞ்சன், உருத்திரன், ஸ்ரீகரன் (அன்ரன்), மகிந்தன் , லின்டன் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் ஜெர்மனியில் நடைபெற்றது .
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம் ,
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!