யாழ். கோப்பாய் டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 11-11-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேனாதிராசா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுபாங்கி(லண்டன்), சுபாணி(கனடா), சுபாகரன்(கரன்- லண்டன்), சுபத்திரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவீந்திரன்(லண்டன்), சிவலோகநாதன்(ஜெயந்தன்- கனடா), காயத்திரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சொர்னா மற்றும் அன்னரத்தினம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி(தவமணி), தெய்வேந்திரம் மற்றும் புவனேஸ்வரி, இராசலட்சுமி, பேரின்பநாயகன்(ராஜன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மயில்வாகனம், வேலுப்பிள்ளை, பாக்கியம், தேவராசா, செல்வராசா, தர்மலிங்கம் மற்றும் தர்மகுலசிங்கம்(வெள்ளை குட்டி), பராசக்தி, பரமேஸ்வரி, சரஸ்வதி, ஷாமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரிஷன், பிருந்தன், அபிராமி, அனிஸ், லக்ஷிகா, சங்கவி, ஆரணி, ஆதவி, அக்ஷயா, அன்ஷிகா, தருணிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.