யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு மனோகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 21-11-2021
விழிகளெல்லாம் நீர் சொரிய
விரைந்து சென்ற எம்முயிரே
அழியாது உன் நினைவுகள்
அகந்தனிலே என்றும் நீ வாழ்வாய்
இன்றுடன் ஓராண்டு ஆனதையா
எமை பிரிந்து
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
எப்போதும் உமை மறவோம் ஆருயிர் அன்பே
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
என்னாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்த நீங்கள்
விண்ணோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
பல காலம் இருப்பீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!