யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Middelfart ஐ வதிவிடமாகவும் கொண்ட லுகிதா செல்வராஜா அவர்கள் 16-11-2021 செவ்வாய்கிழமை அன்று சுவிஸில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கமலம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
செல்வராஜா புஸ்பவதி(டென்மார்க் பரடேஸியா) தம்பதிகளின் மூத்தப் புதல்வியும்,
டிலக்ஷன், சனோகா, ஜெனோஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரஜிதா, ராயுதன், நிறாயுதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
உதயன், ரேகா, துஷ்யந்தி ஆகியோரின் மைத்துனியும்,
சபீனா, பபிஷா ஆகியோரின் பெரியம்மாவும்,
யஷ்ரின், கேஷின், ஜெயசித், சிரோன், ஜனேஸா ஆகியோரின் அத்தையும்,
துஷாந்தன், விஜிந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வின்சன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.