யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் செல்வகுமார் அவர்கள் 24-11-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம், இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நாகராஜா மற்றும் மீனாட்ஷீ தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தினி(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அருணன் மற்றும் அருஷ்ணவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விமலாதேவி, ஜீவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகுமார், சுதாகரன், சுசித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.