யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Asnières-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா விஸ்வரட்ணம் அவர்கள் 16-12-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,
திரு. திருமதி கந்தசாமி தம்பதிகளின் மருமகனும்,
சபேசினி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கரணி மற்றும் குபேரன், தவிசா ஆகியோரின் அன்பு தந்தையும்,
நேசமணி, புஸ்பராஜா, இராஜரட்ணம்(குட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.