யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை கந்தசாமி அவர்கள் 16-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
கணேசம்மா(லலி) அவர்களின் பாசமிகு கணவரும்,
கலா, சுதா, ராஜி, துஷா, செல்வி ஆகியோரின் நெஞ்சில் நிறைந்த அப்பாவும்,
சிங்கராசா, பாபு, கிருபா, ராஜூ, ஹரீஸ் ஆகியோரின் மதிப்பிற்குரிய மாமனாரும்,
காலஞ்சென்ற நடராசா மற்றும் சற்குணநாதன், திலகேஸ்வரி, சண்முகரட்ணம், குணசேகரம், காலஞ்சென்ற தையல்நாயகி மற்றும் மல்லிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், ஞானமலர், குணசிங்கம் மற்றும் சுகந்தி, ரதி(லண்டன்), காலஞ்சென்ற தெய்வேந்திரம் மற்றும் பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற தில்லைநாதன், கதிரமலைநாதன்(கனடா), சிவநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு அத்தானும்,
யோகேஸ்வரி, ஜெயா, ஜீவா ஆகியோரின் அன்பு அண்ணனும்,
அனோஜன், சரண்யா, ஜெனத்தன், கவித்தன், மதுஷன், ஜெசிக்கா, ஜெசாந், டனி, டிலன், ஜெனிசா, ஆர்த்தி, ஆரணி, சுவேதா, ராகுல் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.