யாழ். வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவமணி சிதம்பரப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்மூடித்திறக்கும் நேரத்தில் எங்களைத்
தவிக்கவிட்டு நிரந்தரமாக பிரிந்தீர்களே
உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார்?
மீண்டும் ஒருமுறை திருமுகம் காண
உள்ளம் கிடந்து பரிதவிக்கின்றது
நீங்கள் மறைந்து ஓராண்டு கடந்தாலும்,
இன்றும் உங்கள் நினைவால்
நாம் வாடுகின்றோம் அம்மா!!
என்றும் நாம் மறக்கமாட்டோம்
உம்மை நினைத்தே நாமிங்கு வாழ்கின்றோம்
நீங்கள் இல்லை என்ற எண்ணம் எமக்கில்லை
வாழ்வீர் எம்மனதில் நாம் வாழும் காலம்வரை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்