யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பரராசசிங்கம்(முன்னாள் வர்த்தகர் - முருகன் ஸ்டோர்ஸ், கொழும்பு) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டும் பறந்தோடிப் போனதோ- நாமிங்கு
மெத்தவும் மேனியெழில்
காணாது கவலை கொள்கின்றோம்!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
தெய்வமே உதிரத்தை உரமாக்கி
மெழுகு போல் உடம்பினை உருக்கி
கல்வி வளம் பெருக வைத்து
வாழ்க்கை தன்னை தேடித்தந்து சென்றீரோ?
வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியுமா?
என்றும் உம் நினைவலைகளை
நெஞ்சம் மறப்பதில்லை...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!