யாழ். கைதடி மத்தி வளர்மதி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தன் மோகனச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 27-12-2021
அல்லும் பகலும் எமக்காக வாழ்ந்தீரே!
ஆண்டுகள் ஒன்று போனாலும்
ஆறுமோ எமது வலிகள்.
காலங்கள் கடந்து சென்றாலும்
காற்றுடன் கலந்திடுமா வேதனை!
எமது காவியத்தின் நாயகரே
எங்கு நீங்கள் சென்றீர்களென
ஏங்குதையா எமது மனம்.
பாரினிலே வாழ்ந்திட பல ஆண்டுகள்
வேண்டுமென்று சொல்லி விட்டு
பாதியிலே எமை பதைபதைக்க விட்டு விட்டு சென்றீரே!
நாம் வாழும் காலம் வரை உங்கள் நினைவுகளுடன் வாழ்ந்திருப்போம்.