யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகரை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை சிந்தாமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு ஆண்டொன்று ஆனதா.?
இன்னும் ஆறவில்லை
எம் துயரம் தாயே…
ஓராண்டு காலம் ஓடி மறைந்ததம்மா!
இப்புவிதனில் எம்மை தவிக்க விட்டு!
ஆண்டுகள் பல ஓடி வந்தாலும்
ஆறாத எம் துயர் யார் துடைப்பார்?
மாறாத இன்முகம் நாம் காணவே
மறு பிறப்பில் வருவீரோ துயர் நீக்கவே!!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அம்மா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரம்மா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!