யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குளம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சுப்பிரமணியம்(இளைப்பாறிய தபால் திணைக்கள உத்தியோகத்தர்) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது!
மண்ணைவிட்டு நீ சென்றாலும்
நீ வென்ற மனங்களை விட்டு
சென்றிடத்தான் முடியுமோ?
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
மறவாது ஐயா உங்கள் பாசம்
எம்முயிரான எங்கள் ஐயாவே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து
விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.