யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை சோமசுந்தரம் சிவனருள்சுந்தரம் அவர்கள் 07-03-2020 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம்(பயில்வான் சோமு), பரமநாயகி தம்பதிகளின் தவப் புதல்வரும்,
சரஸ்வதி(ஓய்வுபெற்ற வடபிராந்திய பிரதி முகாமையாளர், மக்கள்வங்கி ) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சிவபாதசுந்தரம், சிவசுந்தரம், சிவகாமசுந்தரி, காலஞ்சென்றவர்களான மகாலக்ஷ்மிதேவி, சிவயோகசுந்தரம் மற்றும் சிவஞானசுந்தரம், காலஞ்சென்ற சிவேநசசுந்தரம், சிவலோகசுந்தரி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
சறோஜினிதேவி, சத்தியவதிதேவி, ராஜேந்திரா, காலம்சென்ற மகேந்திரன், ரவீந்திரன், பாலேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாருணி, வினோபா, ப்ரீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலேசன் அவர்களின் அன்பு மாமனாரும், ஆதுஷி அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் புதுவளவு வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 10-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.