கிளிநொச்சி பொன்னாவெளியைப் பிறப்பிடமாகவும், பூநகரி குமுழமுனை முழங்காவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் பாலசிங்கம்(பூநகரி குமுழமுனை ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பூசகர்) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்துடன் வழி நடத்திய – எங்கள் அப்பா!
எம் கனவெல்லாம் நனவாக்க
ஓய்வின்றி உழைத்தவரே!
ஒரு கலங்கரை விளக்கமாக
நீங்கள் இருந்தீர்கள் அப்பா!
நீங்கள் காட்டிய நேர்வழியில்
நாள்தோறும் நடக்க
நேர்மை தவறாது நடக்க
ஆசிகள் பல தந்து
எமைக்காத்து அருளும் அப்பா!
கணப்பொழுதில் கண்மூட
உம் இறுதி மூச்சு நின்றது
நம்ப முடியவில்லை இன்னளவும்
உம் உன்னத நினைவுடன்
நாம் வாழ்ந்திடுவோம் அப்பா!
இனிய வாழ்வை எமக்களித்து
அதில் நீ அற்றுப்போனதேன் அப்பா!
நெஞ்சில் வலியுடனும்
நீங்காத நினைவுகளோடும்
என்றென்றும் உங்கள் அழியா
நினைவுகளுடன் வாழும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்…
என்றும் கலையாத உங்கள் நினைவுகளுடன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!