யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, மாங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிப்பிள்ளை பாலசிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
முட்பலா- உள்ளே
முதிர்
“சுளையாய்”...
வேம்பின்
வேரில்- வெளிப்படும்
“வெல்லமாய்”...
கஷ்டங்களை
கணம் கணமாய்
சுமக்கும்
“கர்ப்பிணியாய்”...
எங்களை- உயர்த்த
அத்திவாரமாய்
தன்னை புதைத்துபோன,
“அப்பா”!!
உங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!